வெள்ளி, 21 ஜனவரி, 2011

மனதின் அழகு வீட்டில் தெரியும்



நான் நினைத்துக் கொண்டிருந்தேன் மனது அழகாய் இருக்கும்போது வீடு அழகாய் இருக்குமென்று. சந்தோசமாக இருக்கும்போது நான் வீட்டை அழகாக வைத்திருப்பது வழக்கம். மனது மகிழ்ச்சியற்று இருக்கும்போது வீடு கலைந்து கிடக்கும்.

ஒரு முறை வீட்டுக்கு வந்தார் மாஸ்டர். (இப்படித்தான் நான் அவரை அழைப்பது வழக்கம்.) இவர் என் ஊர்க்காரர். மட்டுமல்லாமல் என் வாழ்க்கை குறித்து அக்கறை கொண்டவர். அன்பு நிறைந்தவர். 

வீடு கலைந்து கிடந்தது. பார்வையால் ஒரு வட்டம் அடித்துவிட்டுச் சொன்னார். "வீடு அழகாக இருந்தால் மனது அழகாக இருக்கும்."

இவ்வளவு நாட்களாக நான் நினைத்துக் கொண்டிருந்ததற்கு எதிர் கோணத்தில் இருந்தது மாஸ்டருடைய கருத்து.

ஒரு காலைப் பொழுதில், கவலைக் கொள்ளும் சம்பவம் நடந்தது. அது மூன்று நாட்கள் தொடர்ந்தது. ஐந்து நாட்களில் மனம் சோர்வுக்கு அடிமையாகிப் போனது. இனி என்ன செய்வது?

மாஸ்டர் சொன்னது நினைவுக்கு வந்தது. அரை நாளில் வீட்டை சுத்தம் செய்து அழகாக்கினேன். மனம் அழகாக மாறிற்று. கவலையும் சோர்வும் ஓடிப்போனது. ஆனால்...   இந்த வேலையைத் துவங்குவது கொஞ்சம் கடினம்தான். என்ன செய்வது? மனதை அழகுபடுத்த வீட்டை அழகுபடுத்தித்தான் ஆகவேண்டும்.

நீதி: சுத்தம் சோறு போடும்., குழம்பை நாம்தான் செய்ய வேண்டும். 

2 கருத்துகள்:

கருத்துரையிடுக