வியாழன், 27 ஜனவரி, 2011

திரையரங்கமாக மாறும் தேவாலயங்கள்



என் தந்தையின் வீட்டை சந்தை ஆக்காதீர்கள் - யோவான் 02:16

சந்தை மயமாகிவிட்ட உலகம் - நேர்மையை இழந்தது மனித இனம். அன்பு, காதல், கருணை எல்லாமே விற்பனை பொருளாகிவிட்ட நிலை. மனதை விற்பது அசிங்கம் என்பதை உணராத உயிர் வாழ்தல். இதையெல்லாம் தாண்டி... கடவுளை பாதிரியார்கள் விற்பதைக் குறித்து கவலைக் கொள்ளாமல் இருக்க முடியாது.

பெசன்ட் நகர் - வேளாங்கண்ணி மாதாவை தரிசிக்க வருபவர்கள் பைக்கை நிறுத்த 5 ரூபாய், ஆட்டோ -  கார் 10 ரூபாய்,  டேக்சி 15 ரூபாய், வேன் 50 ரூபாய், பஸ் 100 ரூபாய் என்று வசூல் வேட்டை நடந்து வருகிறது. அது மட்டும் அல்லாமல் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை யார் வேண்டுமானாலும் வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம். அதற்கு தனி தொகை.

இதைவிட கேவலம் காசு கொடுத்து வண்டியை நிறுத்தும்போது, வண்டி காணாமல் போனால் நிர்வாகம் பொறுப்பல்ல என்ற நீதி மொழியை அச்சிட்டு வேறு கொடுக்கிறார்கள்.


இவ்வளவு காலம் அரசியல்வாதிகள்தான் நீதியை விற்றார்கள். இப்போது பாதிரியார்களும் விற்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

அன்று: இயேசு கிறிஸ்து எருசலேமிலுள்ள தேவாலயத்துக்கு வந்தபோது, அங்கே வியாபாரம் செய்துகொண்டிருந்தவர்களிடம் 'என் தந்தையின் வீட்டை சந்தை ஆக்காதீர்கள்' என்று சாட்டையால் அடித்துத் துரத்தினார்.

இன்று: 'நம் தந்தையின் வீட்டை சந்தை ஆக்குவோம்... வாருங்கள்' என்று பாதிரியார்கள் கூவி அழைக்கிறார்கள். இவர்களை அடித்துத் துரத்துவது யார்? விடை இல்லாத கேள்வி.

இன்னும் கொஞ்ச நாட்களில் திரையரங்கத்தைப் போல்... தேவாலயத்துக்குள் செல்ல, டிக்கட் வாங்கவேண்டிய நிலை வரலாம். ஆச்சிரியப்படுவதற்கில்லை.


கொடுமை கொடுமை என்று
கோவிலுக்குப் போனால்...
அங்கே இரண்டுக் கொடுமை
தங்கு தங்கென்று ஆடியதாம்...

என்ற பழமொழியை நிஜமாக்கிய பாதிரியார்களுக்கு மக்கள் நன்றி சொல்லியே தீரவேண்டும்.

"பிதாவே இவர்கள் என்னவென்று அறிந்தே செய்கிறார்கள். இவர்களை மன்னிக்காதேயும்."

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

BOSS அதான் சிறப்பு தரிசனம் அப்படின்னு சொல்லி அதிகமா பைசா வசூல் பண்றாங்களே BOSS

ஸ்நேகிதன் சொன்னது…

உண்மைதான் கார்த்திகேயன். ஆனால்... கடவுளை விற்க அனுமதித்தது நம் குற்றம்.

கருத்துரையிடுக