குழந்தைகளிருக்கும் வீட்டில்
பொம்மைகளும் வசிக்கத் துவங்கிவிடுகின்றன.
கைவிடுதலும்
புறந்தள்ளுதலும்
புகார் சொல்லுதலும்
பொம்மைகளிடம் இல்லை.
பேசுபவர்களோடு
ஒருபோதும் பேசுவதில்லை
பொம்மைகள்.
பூட்டப்பட்டிருக்கும் வீட்டுக்குள்
பொம்மைகள் என்ன பேசிக்கொள்ளும்
என்பதை அறியாமலேயே
கதவு திறக்கப்படுகிறது.
மௌனத்தின் மொழியறியாத வீடு
வார்த்தைகளால் மூழ்கிக் கிடக்கிறது.
குழந்தைகளின் அழுகையை
நிறுத்தும் பொம்மைகள்
தன் அழுகையை
மௌனத்தில் மறைத்துக் கொள்கின்றன.
குழந்தைகளின் வளர்ச்சி
குப்பைத் தொட்டியை
பொம்மையின் வீடாக மாற்றுகிறது.
பொம்மைகள் அறிவதில்லை
தங்கள் வாழ்நாளை.
குழந்தையின் மனதில்
மறைத்திருக்கிறது
பொம்மையின் ஆயுள்.
4 கருத்துகள்:
வருக நண்பரே.. உங்கள் வரவு நல்வரவாகுக !!!
Thanks
Nalla irukkuda!
Thanks Baskin
கருத்துரையிடுக